News

பன்றிகாய்சல் தாக்காமல் இருக்க தடுப்பூசி போட்டுகொண்ட நடிகை திரிஷா

இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றி காய்ச்சலால்  இதுவரை இந்த காய்ச்சலுக்கு 1115 பேர் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இந்த பன்றி காய்ச்சல் ஏழை பணக்காரர்,அரசியல்வாதிகள் சினிமா நட்சத்திரங்கள் என்ற பேதம் பார்க்காமல் அனைவருக்கும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில்  இந்தி நடிகை சோனம் கபூரையும் பன்றி காய்ச்சல் தாக்கி உள்ளது. தற்போது அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பன்றி காய்ச்சல் குறித்து சினிமா நட்டத்திரங்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்து உள்ளது.இதனால் பன்றி காய்ச்சல் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் சினிமா துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

பன்றி காய்ச்சல் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கையாக நடிகை திரிஷா படபிடிப்பு தளங்களில் முககவசத்துடன் அணிந்து வருகிறார்.

தற்போது ஜெயம் ரவி மற்றும் திரிஷா நடிக்கும் அப்பாடக்கர் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்துகொண்டிருக்கின்றனர். இயக்குநர் சுராஜ் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் படபிடிப்பு நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் திரிஷாவும் ஜெயம் ரவியும் முக கவசத்ததுடன் வலம் வருகின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பன்றி காய்ச்சல் தாக்காமல் இருக்க முன்னதாக  திரிஷா தடுப்பூசி போட்டுக்கொண்டதை  தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

திரிஷா இடது கையில்  தடுப்பூசி போட்டு கொண்டதை படம் எடுத்து டுவிட்டரில் போட்டு உள்ளார்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment